
கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சம்பந்தனே வெளியிட்ட தகவல்
“மக்கள் விரும்பும் ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நேர்காணலில் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சம்பந்தன்,
“தமிழ் மக்களால் நன்கு விரும்பப்படும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு வரைத் தான் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவு செய்வோம்” என்று கூறினார்.