பஸ்களை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுப்பு!
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது செயற்படும் பஸ்களை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுகாதார ஆலோசனைகளை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 6 பஸ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நிமித்தம் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ் போக்குவரத்தில் அதிக பயணக்கட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.