சிங்கப்பூர் சிறையிலுள்ள 21 வயது இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூர் சிறையிலுள்ள 21 வயது இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் சிறையிலிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமூக நுழைவு அனுமதி அட்டையை வைத்திருந்த அவர், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து சாங்கி சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிருமி பரவல் தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர், அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 6ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மற்ற கைதிகளிடமிருந்து 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.

அவருடன் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்ட மற்ற கைதிகளுக்கு கிருமித் தொற்று இல்லையெனக் கண்டுபிடிக்கப்பட்டது. நோய்க்கான அறிகுறிகள் தென்படாத குறித்த இளைஞன், சிறைச்சாலைக்கு வெளியில் உள்ள தனிமைப்படுத்தும் வசதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நால்வருடன் இவருக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.