சுகாதார சீர்கேடுகளுடன் அபாய நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை வளாகம்!

சுகாதார சீர்கேடுகளுடன் அபாய நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை வளாகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மாங்குளம் பொதுச்சந்தை வளாகம் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வருவதாகவும் குறித்த இடத்தில் நுளம்பு பெருகி நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் இந்நிலைமையினை உடனடியாக சீர் செய்வதற்கு பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதால் அங்கு நுளம்புகள் உற்பத்தியாக கூடிய சூழல் காணப்படுவதோடு குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாது கிடைப்பதாகவும் நீர் தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையங்களில் சென்று சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு பல்வேறு குற்றச் சாட்டுக்களை வைத்து நடவடிக்கை எடுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு மக்களுக்கு பல்வேறு ஆபத்தாக உள்ள குறித்த பகுதியை துப்பரவு செய்பவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அபாய நிலையில் காணப்படும் மாங்குளம் பொதுச்சந்தை : மக்கள் கோரிக்கை - தமிழ்க்  குரல்

அபாய நிலையில் காணப்படும் மாங்குளம் பொதுச்சந்தை : மக்கள் கோரிக்கை - தமிழ்க்  குரல்