
மேல் மாகாணத்தில் 395 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 395 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண சிரேஸ்ட காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெரோயின் போதை பெருளை கைவசம் வைத்திருந்த 161 பேர் மற்றும் போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த 119 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.