
எமது கொள்கைத் திட்டம் இதுவே! பகிரங்கமாக அறிவித்தார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்யா நாதெல்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இதுகுறித்து நேற்றையதினம் காணொளி ஊடாக உரையாடினார்.
இதன்போது, புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை குறித்து கருத்து வெளியிட்ட ஜோ பைடன்,
ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட கொரோனா நிவாரணச் சட்டம் போன்று, மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புச் சட்டம் இயற்றப்படும்.
முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு மின் வாகன தயாரிப்புத் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மின் வாகனங்களுக்கு, நாடு முழுதும், 5 இலட்சம் சக்தியற்ற மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், நல்ல சம்பளத்துடன், 10 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். பசுமை எரிசக்தி தொடர்பான ஆய்விற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனம், பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு துறைகளில் வருங்கால தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.