
மஷ்ரஃபி மோர்டாசாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று!
பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரஃபி மோர்டாசாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை இன்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் டாக்காவில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் முன்னாள் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரும், ஒருநாள் அணியின் தலைவருமான தமீம் இக்பாலின் மூத்த சகோதரருமான நஃபீஸ் இக்பாளுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதேவேளை ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் பங்களாதேஷ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.