இன்று !! கொரோனா அழியுமா? அல்லது முழு உலகமுமே அழிந்து விடுமா? நடக்கப்போவது என்ன? அச்சத்தில் மக்கள்

இன்று !! கொரோனா அழியுமா? அல்லது முழு உலகமுமே அழிந்து விடுமா? நடக்கப்போவது என்ன? அச்சத்தில் மக்கள்

2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று இடம்பெற உள்ளது. அதேநேரம் மாயன் கலண்டரின் படி இன்றுதான் இப்புவி உலகின் இறுதி நாள் என்றும் கூறப்படுகின்றது.

மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி இன்றுடன் நிறைவடைவதால், இன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

இதேவேளை டிசம்பரில் இடம்பெற்ற சூரிய கிரகணத்தால் உருவாகிய கொரோனா இந்த சூரிய கிரகணத்துடன் முடிவுக்கு வரும் என்றும் பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.

ஆகவே இன்று என்ன நடக்கப்போகின்றது? உலகம் அழியுமா அல்லது கொரோனா அழியுமா? அல்லது புதிதாக ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கேள்விகளுக்கு மத்தியில் இன்றைய நாள் ஆரம்பமாகி உள்ளது. அந் வகையில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை ஸ்ரீலங்கா மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.

இன்று காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

இந்த நிலையில் சூரியக் கண்ணாடிகள் அல்லது எக்ஸ்ரே தாள்களால் ஆன இருண்ட கண்ணாடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது,

ஆனால் சூரிய கிரகணத்தைக் கவனிக்க குறிப்பாக பயன்படுத்தப்படும் 14 வது வேல்டீங்(இரும்பு பொருத்து) கண்ணாடிகள் மற்றும் ஏனைய பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். இந்த பகுதி சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று இலங்கை கோள் மண்டலம் அறிவுறுத்தியுள்ளது.