புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய படகு! நால்வர் பலி - சிலர் மாயம்

புலம்பெயர்ந்தோருடன் கடலில் மூழ்கிய படகு! நால்வர் பலி - சிலர் மாயம்

மாக்ரெப் பிராந்தியத்தில் புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாக்ரெப் பிராந்தியத்தில் இருந்து கேனரி தீவுகளை நோக்கி 35 புலம்பெயர்ந்தோருடன் சென்று கொண்டிருந்த படகே நேற்று (24) விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலரைக் காணவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் படகைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.