மன்னாரில் மத ஸ்தலங்கள் மீது விஷமிகள் தாக்குதல்
மன்னார் பிரதேச செயலக பிரிவின் தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.
திருகேதீஸ்வரம் தள்ளாடி வீதி அருகில் அமைந்துள்ள பிள்ளையார் சிற்றாலயமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதுஇ
சிற்றாலயத்தில் காணப்பட்ட கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் விறகுகளால் மூடப்பட்டு அவமரியாதைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்படுவதும் சேதப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில்,
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.