
முள்ளியவளையில் விபத்து - குடும்பப் பெண் படுகாயம்
முல்லைத்தீவு - முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பாடசாலைக்கு தனது பிள்ளையைக் கொண்டு வந்து இறக்கி விட்டு - மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு செல்ல முற்பட்ட வேளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.