நினைவேந்தல் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

நினைவேந்தல் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஒன்று கூடுவதோ மக்களை ஒன்று திரட்டி நிகழ்வுகளை நடத்துவதோ முடியாது என பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைக் கட்டளை வழங்கியது.

மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித்தனியாக விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகளாக முன்னர் தாக்கல் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் மீதான கட்டளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றினால் இன்று நண்பகல் வழங்கப்பட்டது.