11 ஆயிரத்து 994 பேர் கைது
கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் போதை பொருள் வியாபாரம் உள்ளிட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறாம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் ஹொரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த 3 ஆயிரத்து 811 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கஞ்சா போதை பொருள் விற்பனை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 609 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபாரங்களுடன் தொடர்புடைய 5 ஆயிரத்து 574 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.