
உலக வங்கியின் நிதி உதவி
இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி மேலும் ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க முன் வந்துள்ளது.
சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், உலக வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் திருப்தி அளித்துள்ளதனை அடுத்தே இந்த அடுத்த கட்ட நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு முன்னர் உலக வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல் வேறு திட்டங்களை நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள 63 அரச மருத்துவ மனைகள் மற்றும் ஏனைய அரசாங்க சுகாதார நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு முறைமையை இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட இலக்கு நோக்கி இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.