முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிமருந்துடன் இருவர் கைது

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிமருந்துடன் இருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட வனப்பகுதி ஒன்றில் இருந்து 200 கிராம் சி-4 ரக வெடிமருத்துடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்கள் இருவரும் உடையார்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பி சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேநேரம் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது

குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக தடயவியல் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றனவா? என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்

இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்டது எனவும் அண்மையில் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறியமுடிகின்றதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம்; தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்று அதிகாலை 5.30 தொடக்கம் முற்பகல் 10 மணிவரை குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.