
யாழ்-சங்கானை வீதியிலுள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்- இருவர் காயம்
யாழ்ப்பாணம் - சங்கானை தேவாலய வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர்களே காயமடைந்துள்ளனர்
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.