கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியில் கடந்த 23 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில், கிளிநொச்சியில் கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அச்சம் காரணமாக ஆரம்பித்த அன்றே பூட்டப்பட்ட பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் நாளை திங்கள் கிழமையே தீர்மானிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று கிடைக்கவுள்ள பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் நாளை திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள துறைசார் அதிகாரிகளுடனான கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.