முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதி திருத்தப்பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதி திருத்தப்பணிகள் ஆரம்பம்!

அரசாங்கத்தின் ஆயிரம் கிலோமீற்றர் வீதி திருத்தப்பணிகள் இன்று(29) நாடளவிய ரீதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகங்களின் கீழும் தலா மூன்று கிலோமீற்றர் வீதி திருத்த பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி 1 ஆம் வட்டாரத்தில் உள்ள வீதி திருத்தப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மத வழிபாடுகளை தொடர்ந்து வீதி திருத்தத்திற்கான பெயர் பலகை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டு ,திருத்தப்பணிக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.