கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை -வான்பாய தயாராகும் குளங்கள்

கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை -வான்பாய தயாராகும் குளங்கள்

கிளிநொச்சியில் புரவி புயலை அடுத்து பெரு மழை பெய்து வருவதனால் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இரவு 10 மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் நாளை வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரவு 10 மணி வாசிப்பின்படி

அக்கராயன்குளம் 11'-04" FSL 25'-0", கரியாாலை நாகபடுவான் குளம் 02’-03" FSL 10', புதுமுறிப்பு குளம்11'-07" FSL 19', குடமுருட்டிகுளம் 05'-04" FSL 8' 00", வன்னேரிகுளம், 07'-04" FSL 9'-06" ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்துள்ளது. கனகாம்பிகை குளம் 8 அடியாக அதிகரித்துள்ளது. பெரியகுளம் 4" வரை வான்பாய ஆரம்பித்துள்ளது.

நாளை கனகாம்பிகை குளமும் வான் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மக்களை அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.