
கொரோனாவால் பிறந்ததும் தாயை இழந்த இரட்டை குழந்தைகள்...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் இரட்டை குழந்தைகளை பிரசவித்த மறுகனம் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மதுரையை சேர்ந்த கர்ப்பிணி தாய் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்றைய தினம் தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்பட்டமையினால் மருத்துவர்கள் தாயையும் குழந்தைகளையும் காப்பாற்ற போராடி வந்தனர்.
இறுதியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிறக்கச்செய்வதற்கு வைத்தியர்கள் முயற்சித்தனர்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிரசவம் செய்யப்பட்டதன் பின்னர் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வைத்தியர்கள் உறுதி செய்துக்கொண்டனர்.
இந்நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்கைக்குட்படுத்தப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிறந்து தனது தாயின் அரவணைப்பினை பெறாத குழந்தைகளை நினைத்து வைத்தியர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தி நெகிழந்துள்ளனர் என தமிழக ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.