வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு....!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு....!

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.