
புரேவியின் விளைவு. புரண்டது வடமாகாணம்..!
புரெவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி வரையில் 21 ஆயிரத்து 884 குடும்பங்களை சேர்ந்த 72 ஆயிரத்து 410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அங்கு இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்த அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா கூறினார்.
அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயித்து 841 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
66 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துடன், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடமாகாண மாவட்டங்களிலும், திருகோணமலை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அசாதாரண காலநிலை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மாவட்டங்களில் 67 வீடுகள் முழமையாகவும், 3 ஆயிரத்து 167 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.