பிரேசிலில் மேலும் 640 பேர் உயிரிழப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் மேலும் 640 பேர் உயிரிழப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 640 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பிரேசிலில் கடந்த24 மணிநேரங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 17 ஆயிரத்து 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரை 10 இலட்சத்து 85 ஆயிரத்து 38 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் ஜனாதிபதி அலட்சியம் காட்டி வந்ததுடன் 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளி கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் ஜனாதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தை பிரேசில் ஜனாதிபதி சரியாக கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார். இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை பிரேசில் மறுத்தது.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.