உரிய காலத்திற்கு முன் அறுவடை செய்ய வேண்டாமென விவசாயிகளிடம் கோரிக்கை..!

உரிய காலத்திற்கு முன் அறுவடை செய்ய வேண்டாமென விவசாயிகளிடம் கோரிக்கை..!

விலையேற்றம் காரணமாக உரிய காலத்திற்கு முன் மஞ்சள் அறுவடை நிகழ்ந்தால் அதன் பாதிப்பை விவசாயிகளே அனுபவிக்க நேரிடும் என ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.

அவ்வாறு செய்வதால் அறுவடை குறைந்து பாதிப்பை எதிர்நோக்க வேண்டியேற்படுமென அத்திணைக்களத்தின் முகாமையாளர் உபுல் ரணவீர தெரிவிக்கின்றார்.

இதனால் விவசாயிகள் எதிர்ப்பார்க்கும் வகையில் உரிய விலை மற்றும் ஏற்ற அறுவடையைப் பெற முடியாமல் போவதால் அவ்வாறு செய்ய வேண்டாமென திணைக்களத்தின் முகாமையாளர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.