நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மட்டகளப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் மழை வீழ்ச்சி பதிவாகும்

இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக 2 ஆயிரத்து 131 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வட மாகாணத்தில் 2 ஆயிரத்து 122 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 100 பாதிக்கப்பட்டுள்ளனர். 

வட மாகாணத்தில் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 280 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன் வட மாகாணத்தில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர். 

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வீசிய கடும்காற்று காரணமாக 9 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் பபாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மாவட்டத்தில் 8 வீடுகள் பகுதியளவில் சேமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.