வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்களை சமூகத்திற்குள் சுதந்திரமாகச் செல்ல, அனுமதிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவர்களுக்கான தனிமைப்படுத்தல் பணியில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

அண்மைக்ககாலமாக வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இலங்கையர்களின் நிலைமையை பொறுத்து தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இறுதி தீர்மானத்தை எடுப்பார்.

கடந்த நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த அனைவரும் விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனி மைப்படுத்தல் நிலையங்களிலும் 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் .

புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் முடிவில் பிசிஆர் சோதனைகள் நடத்தப்படும்.

பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படாத விடத்து, முன்பு நடைமுறையில் இருந்தவாறு அவர் மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.