கொவிட்-19 சோதனையின்றி பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்பட்ட 1,097 மருத்துவமனை நோயாளிகள்!

கொவிட்-19 சோதனையின்றி பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்பட்ட 1,097 மருத்துவமனை நோயாளிகள்!

கொவிட்-19 தொற்று பரவிய ஆரம்பத்தில் 1,000 இற்க்கும் மேற்பட்ட மருத்துவமனை நோயாளிகள், கொரோனா வைரஸ் பரிசோதனை இல்லாமல் வேல்ஸ் பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொவிட்-19 இற்க்கு பரிசோதனை செய்யப்படாமல் 1,097 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டதாக வேல்ஸ் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

வேல்ஸின் பராமரிப்பு மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் வைரஸைச் சுமக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் அழைத்துச் செல்வதில் அழுத்தம் இருப்பதாக பராமரிப்பு இல்லங்கள் உணர்ந்தன. இது பாதுகாப்பான புகலிடங்களை கொரோனா வைரஸ் போர் மண்டலங்களாக மாற்றியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம், வேல்ஸில் ஜூன் 5ஆம் திகதி வரை 654 கொவிட்-19 இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இது வேல்ஸில் பதிவான அனைத்து கொரோனா வைரஸ் இறப்புகளில் 28 சதவீதமாகும்.

மார்ச் 1ஆம் திகதி முதல் பராமரிப்பு இல்லங்களில் 2,937 இறப்புகள் பதிவாகியதாக கேயார் இன்ஸ்பெக்டரேட் வேல்ஸ் (Care Inspectorate Wales) தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான இறப்புகளை விட 86 சதவீதம் அதிகமாகும். மேலும் 2018ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 54 சதவீதம் அதிகமாகும்.