
கொவிட்-19 முடக்கநிலையை மீண்டும் உள்ளூர் மட்டத்தில் அறிவித்தது ஜேர்மனி!
இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றனர்.
சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கெட்டர்ஸ்லோ மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் திரும்பும் என்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் முதல்வர் ஆர்மென் லாஷெட் கூறியுள்ளார்.
முடக்கநிலை கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும், இந்த நடவடிக்கை ஒரு ‘தடுப்பு நடவடிக்கை’ என்றும் அவர் விபரித்தார்.
மே மாதத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்த தொடங்கியதிலிருந்து, புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் என புதிய முடக்கநிலை இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பரவலாக பாராட்டப்பட்ட ஜேர்மனியில், தற்போது நோய்த்தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.
ஜேர்மனியின் பொது சுகாதார அமைப்பான ரொபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் (Robert Koch Institute) தலைவர் லோதர் வைலர், ‘நாடு இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். ஆனால் அதைத் தடுக்க முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுவீதம் எண் (ஆர்) 2.76 என மதிப்பிடப்பட்டுள்ளதாக, நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
டோனீஸ் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,331 நேர்மறையான தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கெட்டர்ஸ்லோவில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.