
விரக்தியால் தற்கொலைக்கு முயற்சித்த கைதி...!
மாத்தறை சிறைச்சாலையில் வைத்து கைதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 12 வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து விரக்தி அடைந்தநிலையில் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவர் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக மாத்தறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்இ அவருக்கு நீதிமன்றால் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.