நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டு பிடிப்பு!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டு பிடிப்பு!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது 39 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் காவல்துறையினரும் ஒன்றிணைந்தே இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ஒரு மோட்டார் வாகனம், இரு உந்துருளிகளுடன் 39 கிலோ 197 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 -26 வயதிற்கு உட்பட்டவர்களென தொிவிக்கப்படுகின்றது.