
பூமியை கண்காணிக்க விண்ணுக்கு செல்லும் சி.எம்.எஸ்.01 செயற்கை கோள்..!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 விண்ணேவு வாகனத்தின் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.
கல்வி, மருத்துவம், அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.