
தொல்பொருள் சிதைவு தொடர்பில் ஆராய சென்ற அமைச்சர் விதுர விக்ரமநாயக்க..!
அனுராதபுரம் - இபலோகம - அழகப்பெருமாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள தொல்பொருள் சிதைவு தொடர்பில் ஆராய்வதற்காக விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அந்தப் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
தமது கண்காணிப்பு விஜயத்தின் பின்னர், குறித்த பூமியை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த பகுதியில் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு இருப்பதாக கடந்த 12ஆம் திகதி ஹிரு செய்திச் சேவை வெளிப்படுத்தியது.
பெருமளவான தொல்பொருட்கள் குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் இதன்போது தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.