கொழும்பிலிருந்து செல்வோரை இலக்கு வைக்கும் அரசாங்கம்

கொழும்பிலிருந்து செல்வோரை இலக்கு வைக்கும் அரசாங்கம்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் கொழும்பிலிருந்து கிராமப்புறங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சோதனைகளில் பெரும்பாலானவை பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று முதல், பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக சரிபார்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.