இவ்வாண்டு நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகாிப்பு!

இவ்வாண்டு நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகாிப்பு!

கொரோனா பரவல் சவாலுக்கு மத்தியிலும் நாட்டின் தேயிலை ஏற்றுமதியானது, கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகரிப்பை காட்டுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களுக்கு மானியங்களை வழங்கும் வேலைத்திட்டம் பத்தேகமயில் நேற்று இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேயிலை ஏலத்தில் 85 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ தேயிலை கொழுந்தின் விலை, தற்போது 110 ரூபாவுக்கும் அதிகளவில் விற்பனையாவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.