ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் உள்ளிட்ட ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருணஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் சுப்பிரமணியம் கதிர்ச்செல்வனுக்கு கடந்த 16 திகதி மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் தொற்றுறுதியானது.
இந்தநிலையில் அவர் சென்றிருந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளவர்களை இவ்வாறு தனிமைப்படுத்தி வருவதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருணஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.