நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் பலி..!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தணமல்வில, எம்பிலிபிட்டி, அநுராதபுரம், தம்புள்ளை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.