இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதகரித்துள்ளது-யுனிசெப்

இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதகரித்துள்ளது-யுனிசெப்

கொவிட் 19 பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் வழமைய விட 40 சதவீதம் அதகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலைமைக்கு அமைய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான அதிக அவதானம் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒக்ஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை மாத்திரமின்றி உலகம் முழுவதும் தொலைதூர கல்வி முறையினால் விளக்கமளித்தல் மற்றும் கலந்துரையாடும் சந்தர்ப்பம் இல்லாமையாலும் சில மாணவர்களுக்கு இணையத்தள வசதி இன்மையாலும் பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.