பதுளை - பசறை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
பதுளை - பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேல்மாகாணத்தில் இருந்து பசறைக்கு சென்றிருந்த இருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
பசறை டெமேரியா பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவருக்கும், காவத்தை பகுதியை சேர்ந்த 25 வயதான ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் நகுலேஸ்வரன் எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டார்
இந்த நிலையில் தொற்றுறுதியானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.