
யாழ்ப்பாணம் உட்பட தூர இடங்களுக்கான ரயில்சேவை மீண்டும் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் தூர இடங்களுக்கான பயணிகள் ரயில் சேவை நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பதுளை, கண்டி, மாத்தறை, மற்றும் பெலியத்தை ஆகிய பகுதிகளுக்கான ரயில்சேவைகளே ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனினும் அனைத்து இடங்களுக்குமான ரயில் சேவைகள் நாளையதினம் ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் அவையனைத்தும் எதிர்வரும் 25ஆம் தகதி திங்கட்கிழமையே ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.