கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் திறக்கப்பட்ட இலங்கை விமான நிலையங்கள்! இன்று மட்டும் தரையிறங்கவுள்ளது 15 விமானங்கள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் திறக்கப்பட்ட இலங்கை விமான நிலையங்கள்! இன்று மட்டும் தரையிறங்கவுள்ளது 15 விமானங்கள்

இலங்கை விமான நிலையத்தை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து வைத்துள்ள நிலையில், சுமார் 15 விமானங்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் சிவில் விமானச் சேவைகள் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தரவிருந்தவர்களே இவ்வாறு வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் மூடப்படும் சந்தர்ப்பத்தில், நாளாந்தம் ​​200 விமானங்களில் சுமார் 28 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் நாளாந் தம் சுமார் 2,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.