கொரோனாவால் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள்..!

கொரோனாவால் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள்..!

நாட்டில் மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி, இதுவரையில் நாட்டில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.

மோசமான நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியாவினால் நரம்புத்தொகுதியில் ஏற்பட்ட தொற்றின் மூலம் பல அவையங்கள் செயலிழந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.