
திருகோணமலை கடலில் கப்பல் விபத்து - உடன் அனுப்பப்பட்ட கடற்படை படகுகள்
திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு சிமெந்து ஏற்றவந்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, கப்பலில் 18 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு கடற்படையின் 2 படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.