பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு..!
நிலையான விலை நிர்ணயிக்கப்பட்ட அரசி,பருப்பு உள்ளிட்ட 27 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சதோச நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையால் மக்கள் அடையும் நன்மைகளை தொடர்ந்தும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026