உத்தரகாண்டில் இடம்பெற்ற பனிச்சரிவில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!

உத்தரகாண்டில் இடம்பெற்ற பனிச்சரிவில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!

உத்தரகாண்டில் இடம்பெற்ற பனிச்சரிவு ஒன்றினால் நூற்றுக் கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பாரிய பனிப்பாறை வெடிப்பு ஒன்று பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவினால் அலக்நன்நா மற்றும் தௌலிகங்கா ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் பெரும் அனர்த்தம் பதிவாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஊடகங்களின் தகவல்படி 100க்கும் 150க்கும் இடைப்பட்ட அளவில் உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது