இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 41 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 36 பேர் கடற்படையினர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய நால்வர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாலிருந்து நாடு திரும்பிய 3 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் இதுவரையில் 1790 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில் 940 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுறுதியாகியிருந்த மேலும் 3 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.