
அண்ணா சில நாட்கள் தனிமையில் இருப்பார்.. சூர்யாவின் தம்பி போட்ட ட்விட்டர் பதிவு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சூர்யா கடந்த நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே, சூர்யாவிற்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொண்டு அனைவரிடமும் கைகோர்க்கும் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் சூர்யா.
இதனால், கூட சூர்யாவிற்கு தோற்று உறுதியாய் இருக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில், சூர்யாவின் தம்பி கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021