மியன்மாரில் இரண்டாவது இரவும் இணையதள அணுகல் தடை

மியன்மாரில் இரண்டாவது இரவும் இணையதள அணுகல் தடை

மியன்மாரில் புதிய இராணுவ ஆட்சியாளர்களினால் இரண்டாவது இரவும் இணையதள அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நெட்ப்ளொக்ஸ் என்ற கண்காணிப்பு அமைப்பை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை ஒரு மணியளவில் முழுமையான இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றதை அடுத்து, இடம்பெறும் நான்காவது இணைய சேவை முடக்கம் இதுவாகும்.

பெரும்பாலானோர் இணையதளத்தில் இயங்குநிலையில் இருப்பதனால் எதிர்ப்பை தடுப்பதற்காக ஆட்சியாளர்கள் இத்தகையை நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு தலைவர்களை எதிர்ப்பவர்களுக்கு இராணுவத்தினர் முன்னதாக கடுமையான தண்டனைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது