
ரொபோ விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் - நாசா தெரிவிப்பு
ரொபோ விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்த ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ரொபோ விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியிருந்தனர்.
செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய குறித்த ரொபோ விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக என நாசா தெரிவித்துள்ளது.