இனி வீட்டு வேலை செய்தால் மனைவிக்கும் சம்பளம் கொடுக்கவேண்டும்.. நீதிமன்றம் அதிரடி!
சீனாவில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தில் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற கோரிக்கை விடுக்கலாம்.
பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில், திருமணமான ஐந்து ஆண்டுகளில் குழந்தையை கவனித்துக்கொண்டது, வீட்டு வேலைகளை செய்தது போன்ற பொறுப்புகளை
கவனித்தபோது, கணவர் சென் எதையும் கவனிக்காமல், பங்கேற்காமல் அலுவலகத்துக்கு மட்டுமே சென்றதாக மனைவி வாங் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்
வீட்டு வேலை, குழந்தையை கவனித்துக்கொண்டது ஆகியவற்றுக்கு கூடுதல் இழப்பீடு தேவை என வாங் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
இதனால், மனைவி வாங்கிற்கு 50,000 யுவான் (ரூ.5.60 லட்சம்) இழப்பீடு, குழந்தையை கவனித்ததற்கு இழப்பீடு மற்றும் மாதம் 2000 யுவான் (ரூ.22,500) ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென பெய்ஜிங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
எனினும், 50000 யுவான் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவு என ஒரு சாரார் விமர்சித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.