வடக்கில் கைதிகள் உட்பட ஏழ்வருக்கு கொரோனா

வடக்கில் கைதிகள் உட்பட ஏழ்வருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பிசிஆர் பரிசோதனையில், குறித்த 7 பேருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 81 வயதான வயோதிபப் பெண் ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தமையால் மாதிரிகள் பெறப்பட்டடன. அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் பிசிஆர் முடிகள் நாளையே கிடைக்கும் என்றார்